ஹஸ்பர் ஏ ஹலீம்-
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுனர். ரோஹித போகொல்லாகம தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் இன்று(19)மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் .யூ.எல்.ஏ.அஸீஸ், , உள்ளூராட்சி ஆணையாளர் .எம்.வை.சலீம், , உதவி ஆணையாளர்கள் மற்றும் மாநகர சபையின் ஆணையாளர்கள், நகர சபையின் விஷேட ஆணையாளர்கள், ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.