நாங்கள் எதை நோக்கி போராடினோமோ அவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி வெறும் அற்பசொற்ப சலுகைகள் பெறுகின்ற நிலைக்கு தமிழ் தலைவர்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா ராசைய்யா தெரிவித்தார்.
அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது,
அரசியல் இல்லாமல் எந்தத் துறையிலும் சாதிக்க முடியாது. நாங்கள் தமிழரசுக்கட்சியில் இருந்தபோது பல்வேறு ஏமாற்றங்களை அடைந்து மக்கள் விரக்தியின் விளிம்பில் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தமிழரசுக்கட்சியினர் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறிய விடயங்களையோ குறிப்பாக ஜனாதிபதித் தேரதலில் கூறிய விடயங்களையோ நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழ் தேசியத் தலைமைகள் தங்களுக்குள்ளே கட்சிப்பங்கீடு தேர்தல் பங்கீடுகள் தொடர்பாக அடிபட்டுக்கொள்கின்றார்கள். நாங்கள் பல வருட காலமாக தமிழ் மக்களின் விமோசனத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாடுபட வேண்டும். அதை பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு சின்னமும் அதற்கு ஒரு யாப்பும் அமைய வேண்டும். என்று குரல் கொடுத்தாலும் கூட அது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்து வருகின்றது.
தேர்தல் காலங்களில் யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கட்சித்தலைவர்கள் கூறிய உள்ளக விசாரணை, ஐக்கிய நாடுகள் சபை விசாரணை என்றெல்லாம் கூறினார்கள். அது எதுவும் நடந்தபாடில்லை. அத்தோடு இன்று உண்ணாவிரதமிருந்து வருகின்ற மக்களினுடைய கோரிக்கை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடுவிப்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் எத்தனையோ போராளிகள் சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள் இவைகளையெல்லாம்பற்றி அரசின் தலைவரிடமோ, பிரதமரிடமோ பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. அவர்கள் தங்களுடைய பங்கீடுகள் தொடர்பாகத்தான் பேச்சுவார்ததை நடாத்தினார்கள். இதில் மக்களுக்கு எந்தளவிற்கு தெளிவு இருக்குமோ எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் வேதனையான விடயமாகும். இவை அனைத்தும் தேர்தல் காலங்களில் கூறிய வாக்குறுதிகள் என்பதை தமிழ் மக்கள் விளங்க வேண்டும்.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக நான் இருந்து செய்த சேவைகளுக்கு பிறகு யாரும் எந்தச் சேவையையும் இங்கு செய்யவில்லை இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
பாராளுமன்றத்தில் எங்களுடைய ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதிநிதியாக இருக்கின்ற சிவசக்தி ஆனந்தன் நேடியாக பேசினார், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பிரதிநிதிகளுக்கு தலா இரண்டு கோடி பணம் வழங்கியதாக. இவ்வாறு கூறியதற்கு அதைப்பற்றிய பதிலோ விளக்கமோ தலைவர்களால் அழிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து இருக்கின்ற அமைப்புக்கள் நிதிகள் உதவிகளைச் செய்து வருகின்றார்கள். அது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது ஊனமுற்ற மக்களையோ இதுவரையில் சென்றடையவில்லை.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக தமிழர்களுடைய எந்தவொரு விடயத்தையும் முன்னெடுத்தமாதிரி தெரியவில்லை. இவ்வாறு தொர்ச்சியாக தமிழ் தலைமைகள் நீண்டகாலமாக செய்துவருகின்ற நிலையில் விரக்தியுற்ற மக்கள் தேசியக் கட்சிகளை ஆதரிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு தமிழ் தலைமைகளுடை செயற்பாடுதான் முக்கிய காரணமாகும். தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வருவார்கள். வாக்குப் பிச்சை கேட்பார்கள். வாக்குப் போடுகின்ற இயந்திரங்களாக மக்களை பயன்படுத்துவார்கள். பின்னர் சென்றுவிடுவார்கள்.
இந் அவல நிலையை கருத்தில் கொண்டுதான் தமிழ் தேசியத்தின் குறிக்கோளை அடைவதற்காக ஈழ மக்கள் புட்சிகர முன்னணி உருவாக்கப்பட்டது. மக்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் விரக்தியுற்ற கட்சிகளும் ஏனைய சிறு உதிரிக் கட்சிகளையும் கொண்டு ஒரு பலமான அணியை ஏற்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி இன்று அந்த கூட்டணியை பலப்படுத்துகின்றதும் மக்களுக்கு தெளிவு படுத்துகின்றதுமான பணியை செய்து வருகின்றது.
இந் அவல நிலையை கருத்தில் கொண்டுதான் தமிழ் தேசியத்தின் குறிக்கோளை அடைவதற்காக ஈழ மக்கள் புட்சிகர முன்னணி உருவாக்கப்பட்டது. மக்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் விரக்தியுற்ற கட்சிகளும் ஏனைய சிறு உதிரிக் கட்சிகளையும் கொண்டு ஒரு பலமான அணியை ஏற்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி இன்று அந்த கூட்டணியை பலப்படுத்துகின்றதும் மக்களுக்கு தெளிவு படுத்துகின்றதுமான பணியை செய்து வருகின்றது.
இதற்காக பேரவையும் தமது ஆதரவை வழங்கிவருகின்றமை எமக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்பதுடன் மக்களின் விடிவுக்காக துரோகிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காக நாம் களத்தில் நின்று அகிம்சை வழியில் போராடுவோம். இந்த நிலையில் விரக்தியுற்றிக்கின்ற வட பகுதி மற்றும் கிழக்கு பகுதி மக்களுக்கும் பல திரிவுகளாக செய்திகள் சென்றடைகின்றது.
துரதிஸ்டவசமானது. பாமர மக்கள் விளங்கிக் கொள்கின்ற தன்மை குறைவாக இருக்கும் காரணத்தினால் வாக்களிப்பு என்ற விடயத்தில் பழக்கப்பட்ட நிலையில் மக்கள் இருந்து வருகின்றார்கள். இதனை நாங்கள் அறிந்த நிலையில் முன்பு பழக்கப்பட்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தை தேர்ந்தெடுத்தோம். பழக்கப்பட்ட மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் அதனுாடாக எங்களுடைய சக்தியை அணி திரட்டி தமிழ் தேசியத்தின் குறிக்கோளை அடைவதற்கான வழிவகைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் நாங்கள் எதிர்வருகின்ற காலங்களில் கூட கொள்கைக்காகவும் எங்களுடைய மக்களுக்காகவும் உழைக்கின்ற அணியாகத்தான் நாங்கள் செயற்படுவோம் என்பதை மிக ஆணித்தரமாகவும் உத்தரவாதத்துடனும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு நீதி பெறுவதற்காக ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு எதிரியை அவர்கள் தண்டிக்காமல் அவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பதென்பது ஒரு விந்தையான விடயமாகும். எங்களது கையிலிருந்து கையறு நிலையில் சென்ற இந்த ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறுகின்ற நிலைக்கு இருக்கின்ற ஒரு அமைப்பு அவர்களுக்கு கால அவகாசமும் ஏனைய விசாரணைகளையும் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தாமல் அனுமதி கொடுக்கப்பட்டது இன்னும் மக்களுக்கு வேதனையளிக்கின்றது.
இந்த நிலையில் நாங்கள் எதிர்வருகின்ற காலங்களில் கூட கொள்கைக்காகவும் எங்களுடைய மக்களுக்காகவும் உழைக்கின்ற அணியாகத்தான் நாங்கள் செயற்படுவோம் என்பதை மிக ஆணித்தரமாகவும் உத்தரவாதத்துடனும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு நீதி பெறுவதற்காக ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு எதிரியை அவர்கள் தண்டிக்காமல் அவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பதென்பது ஒரு விந்தையான விடயமாகும். எங்களது கையிலிருந்து கையறு நிலையில் சென்ற இந்த ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறுகின்ற நிலைக்கு இருக்கின்ற ஒரு அமைப்பு அவர்களுக்கு கால அவகாசமும் ஏனைய விசாரணைகளையும் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தாமல் அனுமதி கொடுக்கப்பட்டது இன்னும் மக்களுக்கு வேதனையளிக்கின்றது.
மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் அவர்களுடைய பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கின்ற ஒரு அடிப்படைவாத தலைமைகளை நாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அண்மையில் மனோ கணேசன் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுமாறு கூறியிருக்கின்றார். இதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் வட பகுதியில் நடந்து வருகின்ற அரசியல் மாற்றங்கள் பிணக்குகளை தீர்ப்பதற்கு எமது புதிய அணி முன்னின்று செயற்படும் என்பதை மக்கள விளங்கிக் கொள்ள வேண்டும். இம்முறை உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எமது பிரதேசத்தில் மட்டுமல்லாது வெளிப்பிரதேசங்களிலும் துரோகிகளுக்கு எதிராக எம்மோடு இணைந்து செயற்படுவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.
கடந்த காலங்களில் வட பகுதியில் நடந்து வருகின்ற அரசியல் மாற்றங்கள் பிணக்குகளை தீர்ப்பதற்கு எமது புதிய அணி முன்னின்று செயற்படும் என்பதை மக்கள விளங்கிக் கொள்ள வேண்டும். இம்முறை உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எமது பிரதேசத்தில் மட்டுமல்லாது வெளிப்பிரதேசங்களிலும் துரோகிகளுக்கு எதிராக எம்மோடு இணைந்து செயற்படுவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.