ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் புதிய தேசியத் தலைவர் தெரிவு

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவராக லஹார்தீன் ஷும்ரி மொஹமட் கடந்த 03.12.2017 அன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 38 வது வருடாந்த அங்கத்தவர் பொதுக்கூட்டத்தில் தேசிய அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

மடவளையினை பிறப்பிடமாகக் கொண்ட அவர், அதிபர் A.K லஹார்தீன் மற்றும் ஆசிரியை A.F.S. ஸவாஹிரா ஆகியோரின் புதல்வராவார். 19.10.1992 ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மடவளை மதீனா தேசிய பாடசாலையில் பயின்றதோடு க.பொ.த. உயர் தரத்தினை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் தொடர்ந்தார்.

பாடசாலைக் கல்வியோடு பல இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் 2011 ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய எழுத்தாளர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச போட்டிகளில் சிறந்த கவிஞருக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். மேலும் 2011 ஆம் ஆண்டிற்கான MTV சிறந்த ஆங்கில மொழி மூல விவாதி எனும் விருதினைப் பெற்றுக்கொண்ட அவர் இந்தியாவில் லக்னோ நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச விவாத போட்டியில் சிறந்த விவாத அணியின் தலைவருக்கான விருதினையும் 2011 ஆம் ஆண்டு சுவீகரித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் வழுவூட்டல் நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் அறிமுகமான அவர், 2009 ஆம் இயக்கத்தின் மடவளை கிளையின் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். 2015 தொடக்கம் 2017 வரை இயக்கத்தின் நிறைவேற்றுச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2016 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத் தலைவராகவும் 2017 ஆம் ஆண்டு ஊடகப் பகுதிக்கான பொறுப்பாளரகவும் கடமையாற்றியதோடு இன்று 38 வருட வரலாற்றினைக் கொண்ட இலங்கையின் முன்னணி மாணவ இளைஞர் இயக்கத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

மேலும் வொல்வர்ஹெம்டன் பிர்த்தானியப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாக முதுமானியான இவர் தற்போது கண்டி BCAS Campus இன் வியாபார முகாமைத்துவ விரிவுரையாளராகவும், பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -