எட்டாம் வகுப்பு மாணவர்களை தோப்புகரணம் போடவைத்த ஆசிரியை மீது வழக்கு

மும்பையில் எட்டாம் வகுப்பு மாணவர்களை 300 தோப்புகரணம் போடவைத்த ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை கோலாப்புர் மாவட்டம் சந்காட் தாலுகா கன்னுர் புத்ரூக் கிராமத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்களை 300 தோப்புகரணம் போடவைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அப்பாடசாலையின் அஸ்வினி என்ற ஆசிரியை 8ஆம் வகுப்பில் உள்ள 8 மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தாததால் 300 தோப்புகரணம் போட வைத்து தண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஒரு மாணவிக்கு வலி ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாணவியின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாவும் தெரியவந்துள்ளது.இதனால் குறித்த ஆசிரியை மீது பாடசாலை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் விதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -