இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை இலங்கை அரசு உறுதி -பிரதமர் தெரிவிப்பு

ஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப்பிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில், பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.

இஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து இலங்கைத் தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

எனினும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இந்த நிலைப்பாடு அமெரிக்க தூதுவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -