அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பு நகர சபை மண்டத்தில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளன.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை பாலஸ்தீனிய ஒற்றுமை இயக்கம் மற்றும் இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பல அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -