மூதூர் பாலைநகர் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வேறு இடத்தில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை (02) இரண்டு உழவு இயந்திரங்களுடன் சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றுவதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களுடன் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணிஸா-சூரங்கல் பகுதியைச்சேர்ந்த எம்.எச்.முகம்மது சபான் (24வயது) மற்றும் குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த ஏ.பீ இம்தியாஸ் ஹுஸைன் (20வயது) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட உழவு இயந்திரத்துடன் சந்தேகநபர்கள் இருவரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் நாளை திங்கள் கிழமை 04ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.