சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒருவருட காலத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டூ சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கான பொருளாதார சமூக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக கால்நடைகள் வழங்கும் நிகழ்வு இன்று(27) புனர்வாழ்வு ஆணையகத்தினால் கிண்ணியா அல் அமீன் வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது .
இதில் 25 பேருக்கான தங்களது தொழில்களை மேற்கொள்வதற்காக கால்நடை வளர்ப்புக்களாக ஆடு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டன இவ் நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையகத்தின் ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க புனர்வாழ்வு ஆணையகத்தின் பின்ஆய்வு நிலையப் பணிப்பாளர் கேர்ணல் இஸ்ஸடீன்,திருகோணமலை மாவட்டத்துக்கான பின்ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா,உட்பட கிண்ணியா பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் ,கால்நடை வைத்தியர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமாக்கப்பட்ட பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.