இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியின் அடிநாதம் மருதமுனை ஆகும் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் தெரிவித்தாா்






ஏ.எல்.எம்.ஷினாஸ்-

முஸ்லிம்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஒரு மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்து கொண்டு முஸ்லிம்களின் கல்வி பற்றி தனியாக பேசுகின்ற ஒருவனாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் எனக்கு அடையாளம் தந்த ஒரு சமூகத்தை மறந்து விட்டு பேசுவதற்கும் நான் தயாராக இல்லை என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் மருதமுனையில் தெரிவித்தாா்.

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் பெற்றோர் சமூகம் ஏற்பாடு செய்த தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ. குனுக்கத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாணக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தாா். தொடர்ந்து இங்கு பேசும் போது,

மருதமுனை கிராமத்தில் கடந்த காலங்களில் தனித்தனியான கல்லூரிகளின் வளர்ச்சி பற்றிய கருத்து வேர்ஊன்றி போய் இருந்த போது மருதமுனை பல பின்னடைவை எதிர் கொண்டிருந்தது. இதனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கல்லூரியின் வளர்ச்சி என்பது வேறு ஒரு ஊரின் வளர்ச்சி என்பது வேறு ஒன்று என்தை இன்று மருதமுனை மக்கள் புரிந்திருக்கிறீர்கள்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியின் அடிநாதம் மருதமுனை ஆகும். இதனை யாரும் மறந்துவிட முடியாது. மருதமுனையின் கல்வியை வளர்க்காத ஒருவன் ஒரு போதும் முஸ்லிம்களின் கல்வியின் பால் அன்பும் ஆதரவும் கொண்டவனாக இருக்க முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. இன்று எங்களுடைய சமூதாயத்தின் அறிவு தொடர்பான இருப்பை பல்வேறு பிரதேசங்களிலும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு தன்மானம் உள்ள வெற்றியடைந்த ஊர் என்றால் அது மருதமுனையை தவிர வேறு எந்த ஊருமல்ல. 

எனவே மருதமுனையின் கல்வி முன்னேற்றத்தை அழிப்பதற்கு அல்லது மழுங்கடிப்பதற்கு எவரும் முன்வரக்கூடாது. நீங்கள் உங்களுக்குள்ளே இருக்கும் பிரிவினைகளை விட்டெழியுங்கள். சில குறிப்பிட்ட காலம் மிகக் கூடுதலாக மருதமுனை மக்களாகிய நீங்கள் இழந்திருக்கிறீர்கள். இந்த இழப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த இழப்பாகும்.

ஒரு ஊர் ஒரு பிரதேசம் மிகப் பொரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அந்த ஊரில் அல்லது அந்தக் கல்வி வளர்ச்சியில் ஒரு தாக்கம் ஏற்படும் போது அந்த சமூதாயத்தை சார்ந்த இன்னெரு பிரதேசம் அந்த இடைவெளியை நிரப்புவதற்கு முன்வர வேண்டும். மருதமுனை பின்னடைந்திருந்த இடைக்காலத்தில் அந்த இடைவெளியை நிரப்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் எந்தவொரு முஸ்லிம் பிரதேசமும் இதனை செய்ய முன்வரவில்லை. அதனால்தான் சொல்கிறேன் அதனை செய்யும் தகைமை மருதமுனைக்கு மட்டும்தான் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என்றார்.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலான, ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி, “செஸப்“ அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட பெற்றோா்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு 2015,2016,2017 ஆம் ஆண்டுகளில் காதனை படைத்த 64 மணவா்களும் இவா்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கொரவிக்கப்பட்டாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -