எங்கு பார்த்தாலும் ஏமாற்றங்களும் புறக்கணிப்பும் நடந்தது கொண்டிருப்பதனை காணக்கூடியதாவுள்ளது
அந்த வகையில் பின்வரும் விடயங்களை உங்கள் பார்வைக்காக தருகின்றேன்,
01. ஜனாப் எம்.சி.எம். செரிப் சேர் அவர்கள் (SLAS CLASS-1) - முஸ்லிம் பெரும்பான்மையாக (42%) வாழும் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (நிருவாகம் ) நியமிக்காமல் அவரைவிட அனுபவம் குறைந்த ஒருவரை நியமித்தமை
02. நாளாந்தம் மூதூர் பிரதேசத்திலிருந்து 175ற்கும் மேற்பட்ட டிப்பர்களில் மண் கொண்டு செல்லுதல்.
03. முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்கள் சூரையாடப்படுதல்
04. வட்டார பங்கீட்டில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளமை
போன்ற விடயங்களிலுள்ள சத்தியத்தை நியாயமான முறையில் போராடி வெள்ளவேண்டிய முறையில் ஜனநாயக ரீதியான முன்னெடுப்புக்களை செய்ய தவறினால் எமது மாவட்ட முஸ்லிம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும்
திருமலை முஸ்லிம் அரசியல் தலைமைகளே நீங்கள் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் கைகூடாவிட்டால் அடுத்தகட்ட நகர்வை செய்வதற்கு தயங்குவதேன்?
றபீக் சர்றாஜ்
Mutur
