சில இடங்களில் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிடப்போவதாக கூறும்அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ளதோடுஇப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும்பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜித சேனாரத்ன கூறியுள்ள கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு அவர் மேலும்கருத்து தெரிவிக்கையில்...
சில இடங்களில் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிடப்போவதாக அமைச்சர் ராஜிதசேனாரத்ன கூறியுள்ளார்.அவர் இக் கருத்தை எக்கட்சி சார்பாக கூறுகிறார் என்பதை அறியவிரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து போட்டியிடவேண்டும் என ஒரு பக்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.இன்னுமொரு பக்கம்இப்படியான கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள்.எது எப்படியோ சு.கவினால்மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியாலும் தேர்தல்களில் தனித்து வெல்லமுடியாதென்பது தெளிவாகிறது.
அமைச்சர் ராஜிதவின் குறித்த கருத்தினூடாக சில இடங்களில் இரு கட்சிகள்ஒன்றிணைந்து செல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்ற விடயம் புலனாகிறது.இதனூடாக பல பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவேஅதிகரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம்.இரு கட்சிகள் அல்ல,ஆயிரம் கட்சிகளைகூட்டணி சேர்த்துக்கொண்டுமெஎப்படியான வியூகம் அமைத்து வந்தாலும் கூட்டுஎதிர்க்கட்சியினரை வெற்றிகொள்ள முடியாது.எங்கள் பின்னால் மக்கள் சக்தி உள்ளது.
இப்படி கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல்அவசரமாக தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள்.
இன்றைய இந்த ஆட்சியில் எமக்கு பாரிய பங்குள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில்ஜனாதிபதி மைத்திரிப்பால நடுநிலை வகித்தார். நாம் களத்தில் நின்று போராடி சு.காவுக்குவாக்குகளை எடுத்துக்கொடுத்தோம். அவ்வாறு பெறப்பட்ட வாக்குகளை ஜனாதிபதிமைத்திரிப்பால ரணிலின் கால்களில் விழுந்து சு.கவை அடிமைப்படுத்தியுள்ளார். இனியும்இப்படியான செயல்களுக்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை.
எமக்கு பேரின மக்களின் பூரண ஆதரவுள்ளது.நாம் கடந்த தேர்தலில் பெறத் தவறியசிறுபான்மை மக்களினது ஆதரவையும் தற்போது நாம் பெற்றுள்ளோம்.எங்கள்வெற்றியை யார் ஒன்று சேர்ந்தாலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.