கிராம சேவை அலுவலகங்களை உற்பத்தித்திறன் மிக்க அமைப்பாக மாற்றுகின்ற அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரனையில் ஒழுங்கு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தித்திறன் மேம்பாட்டு மாநாடு பிரதேச செயலாளர் ஜனாப் I.M ஹனீபா தலைமையில் கடந்த 2017.11.14 ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
மேட்படி நிகழ்வில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.M.M அர்ஷத் மற்றும் F.Z சிபானி, கிராம நிருவாக உத்தியோகத்தர் M.S.M நளீர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M.I இஷ்ஹாக், கலாசார உத்தியோகத்தர் M.I அம்ஜாத், விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் M.M சாக்கீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் A.H ஜிப்ரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கினைப்பாளர் S.ரவீந்திரன் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

