புதிதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் ஆய்வு

றியாஸ் இஸ்மாயில்-

கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் நிருவாக சபைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை புதன்கிழமை(15.11.2017) பேரவையின் தேசிய தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் தலைமையில் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போது புதிதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் தொடரபில் முஸ்லிம் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைய வேண்டும் என இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இது விடயமாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கீழ் நாடு பூராகவும் இயங்கும் நுாற்றுக்கு மேற்பட்ட கிளைகளிலிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு பேரவையினால் அமைக்கப்பட்ட சிரேஷ்ட நீதிபதிகள் மற்றும் ஆறு சட்டத்தரணிகள் கொண்ட குழுகள் இவ்விடயங்களை ஆராய்ந்து ஆலோசனை செய்து இதுபற்றி இறுதியாக தயாரிக்கப்பட்ட முழு ஆவணத்தினை பேரவை சமர்ப்பிக்கவுள்ளதாகும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பேரவையின் பொதுச் செயலாளர் சஹீட் எம்.றிஸ்மி இன்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -