பாறுக் ஷிஹான்-
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று (21) ஆரம்பமாகி உள்ளன.
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் அமைந்துள்ள களத்தில் முதல் வித்தான மாவீரன் லெப்ரினல்ட் சங்கரின் நினைவு தூபி
துப்புரவுசெய்து வெள்ளையடித்து மாலை 6 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மக்கள் மாவீரர் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதுமட்டுமல்லாது வல்வெட்டித்துறை தீருவிலி்ல் அமைந்துள்ள கேணல் கிட்டு குமரப்பா புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் இருந்த இடங்களும் துப்புரவு செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் உயிரிழந்த மாவீரர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.





