ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்தையிட்டு, உதவிக்கோரி வங்கியொன்றுக்கு கடிதமொன்றை அனுப்பி, போலியான ஆவணங்களை தயாரித்ததாகக் கூறப்படும் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினாரால் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் அவருடைய தயார் ஆகிய இருவருமே இவ்வாறு எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தகரான விமுக்தி கரதவ மற்றும் அவருடைய தாயான கமந்தி ரேணுகா ராணஎல்ல ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
