முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் வைத்தியசாலையில்



அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி தங்கநகர் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் இன்று பிற்பகல் 12.00மணியளவில் (16) மோதியதில் வாகன சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்துக்குள்ளான வாகனம் இரண்டும் விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்து குறித்து விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -