திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது.



அப்துல்சலாம் யாசீம்-


திருகோணமலை சமுத்ராகம பகுதியில்  ஹரோயின் 60 மில்லி கிரேம்முடன் நபரொருவரை இன்று (04) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-கப்பல்துறை 06ம் கட்டை பகுதியைச்சேர்ந்த சாந்த அன்தோனிலாகே சிசிற குமார (45வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குடிப்பதற்கு வாங்கி கொண்டு வரும் வேளையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை சோதனையிட்ட போது ஹொரோயின் 60மில்லி கிரேம் கைப்பற்றப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -