எஸ் .எல். அப்துல் அஸீஸ்-
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் அபிவிருத்தி தொடர்பான இரு நாள் செயலமர்வு இன்றும், நாளையும் (20, 21) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெருகின்றது.
இவ் இரு நாள் செயலமர்வில் நுகர்வோர் உறவுகளை மேம்படுத்தல், தொழில் விருத்தி நேர் சிந்தனை மனப்பாங்கினை வளர்த்தல், சந்தைப்படுத்தல் நுட்பம்களும் - சிறந்த தொழில் முயற்சியும், தொழில் முயற்சியில் குறைந்த மூலதனத்தைக்கொண்டு கூடிய உற்பத்தினையினை மேற்கொள்ளல், தொழில் விருத்தி அனுபப் பகிர்வு, கணக்கு நடைமுறைகளை பேணுதல் போன்ற தலைப்புகளில் இங்கு பயிற்சிகல் வழங்கப்படுகின்றது.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ், தலைமையில் இடம்பெருக்கின்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி அதிதியாக கலந்துகொண்டதுடன் பயிற்சி நெறிக்கான வளவாளர்களாக கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், தொழில் அதிபர் எம்.ஐ.பரீட் , சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.இராஜசிங்கம், எம்.ஏ.ஏ.அஹத், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ். நயீமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். நௌவ்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



