ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் கடமை பொறுப்பேற்பு


பைஷல் இஸ்மாயில் -

ட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் நேற்று (16) வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ் இஸ்மாயில் அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

ஆசிரியராக தனது தொழிலை மிக இள வயதில் ஆரம்பித்த பிர்னாஸ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றிலும் உதவி செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமானி பட்டதாரியான இவர், இளவயதில் உயரிய பல பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -