மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான காணியை பொதுமக்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக நடைபெற்ற பிரச்சனையை தொடர்ந்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் படி ,து பொதுமக்களுக்குரிய குடியிருப்பு காணி என்று தீர்ப்பு கிடைத்துள்ளதாக காணிக்குரிய பொதுமக்கள் தெரிவித்தனர்.
மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு அருகில் உள்ள காணி பாடசாலைக்குரிய காணி என்று பாடசாலை நிருவாகமும், பெற்றோரும் வாதிட்ட போது ,து எங்களது குடியிருப்பு காணி என்று அப்பகுதி எட்டு முஸ்லிம் குடும்பங்கள் வாதிட்டு வந்த நிலையில் புதன்கிழமை (15.11.2017) அன்று ,து அப்பகுதியில் வசித்து வந்த முஸ்லிம்களின் குடியிருப்பு காணி என்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காணிக்குரிய பொதுமக்கள் தெரிவித்தனர்.
இக்காணிப் பிரச்சனை தொடர்பாக கடந்த ஜீலை மாதம் 18ம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதியும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் பாரியளவிலான போராட்டங்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் ,டையில் கலவரங்கள் ,டம்பெற்றிருந்தது.
இதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் காணித் தகராறுகள் தொடர்பாக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் படி விசாரணைகள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி குறித்த காணியை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.