பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார உடனடியாக இடம் மாற்றம்


பரீட்சை வினாத்தாள்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையில் அவர்  கல்வியமைச்சுக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

கடமையில் அலட்சியம் மற்றும் தவறான வழிநடத்தல்கள் என்பனவற்றைக் காரணம் காட்டி இரகசியத் தகவல்கள் பிரிவின் தலைவரான பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே இந்த இடமாற்றம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கான வினாத்தாள் அமைப்பு, விடைத்தாள் திருத்தம், புள்ளியிடல் மற்றும் பரீட்சைகளின் இரகசியத் தன்மை காப்பு என்பன குறித்த விசாரணைகள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -