கோழியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொன்ற 14 வயது இளைஞருக்கு எதிராக வழக்கு

பாகிஸ்தானில் கோழியை ‘பாலியல் துஷ்பிரயோகம்’ செய்த பதினான்கு வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

ஹஃபீஸாபாத் என்ற ஊரில், கடந்த பதினோராம் திகதி பொலிஸில் வித்தியாசமான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

மன்சாப் அலி என்பவர், தனக்குச் சொந்தமான கோழியொன்றை தனது அயல்வீட்டுக்காரரின் மகன் ஹுஸைன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதனால் கோழி செத்துப்போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்டதாக இரண்டு சாட்சிகளையும் அவர் முன்னிறுத்தியிருந்தார்.

இதையடுத்து ஹுசைன் என்ற பதினான்கு வயதுச் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், பாலியல் உந்துதலிலேயே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்தான்.

கோழியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஹுசைனின் குற்றம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது ஹுசைன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -