நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் தட்டுப்­பாடு தொடர்பில் அறிக்கை கோரியுள்ள பிரதமர் ரணில்

ரஹ்மான் அப்துல் அஸீஸ்-

நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் தட்டுப்­பாடு தொடர்பில் பலத்த சந்­தேகம் ஏற்பட்­டுள்­ளது. எனவே, இது தொடர்பில் உண்மையை கண்­ட­றி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசேட அறிக்­கை­யொன்றை பெற்­று­த­ரு­மாறு கோரி­யுள்ளார்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை‍­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது பெரு­ம­ளவில் எரிப்­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அதி­கா­ரி­களின் அச­மந்தம் கார­ணமா? அல்­லது ஏதேனும் சதித்­திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக என்­பது தொடர்பில் மக்கள் மத்­தி­யிலும் அர­சாங்­கத்­திற்கும் பாரி­ய­ளவில் சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

இதன்­பி­ர­காரம் இது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசேட அறிக்­கை­யொன்றை பெற்று தரு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை விடுத்­துள்ளார்.

எனவே இந்த அறிக்கை கிடைத்த பின்னர் அச­மந்த போக்கிற்கு காரணமானவர்கள் அல்லது சதி திட்டத்திற்காக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -