தமிழீழ ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி!!


ஜெலீல்-

மிழீழத்தின் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ (பெடரல் எபா) எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியொன்றினை சிலர் ஆரம்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களே இந்த பேரணியில் ஈடுபட்டனர்.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக, மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி இடம்பெற்றது.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள், தமிழீழம் என புலிகளால் குறிப்பிடப்படும் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்டுக்களை அணிந்திருந்ததோடு, கறுப்புப் பட்டிகளை தமது தலையில் கட்டியுமிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையில் ஆரம்பமான இந்தப் பேரணியின் போது, புதிய அரசியலமைப்பின் பொருட்டு பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களும் பகிரப்பட்டன.

குறித்த பேரணி அவிசாவளை நோக்கி சென்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -