உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினால் விழிப்புணர்வு





எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,வாழைச்சேனை-

லக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பீட்­ட­ளவில் நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக புதிய சுகா­தார அறிக்கை தெரி­விக்­கின்­றது.

சுகா­தார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்­ளி­வி­ப­ரங்­களின் படி இந்­நாட்டு சனத்­தொ­கையில் 25 சத­வீ­த­மானோர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு காரணம் சீனிக்கு அடி­மை­யா­ன­தன்மை எனவும் முறை­யான நட­வ­டிக்கை மேற்­கொண்டால் இதி­லி­ருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது
இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவர்களும் நாட்டின் தலைநகரத்தில் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு நி்கழ்வுகளை நடாத்தி நீரிழிவு நோய்யிலிருந்து மக்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு நடைபவனியும் நாடக நிகழ்ச்சிகளை பல்வேறு விடயங்களில் முன்னனியாக திகழும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை 15.11.2017 அன்று புதன்கிழமை ஏற்பாடு செய்து சிறப்பாக நடாத்தி மக்களை விழிப்படைய செய்தனர்.
இவ்நிகழ்வுகளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மதன் அவர்கள் தலைமை தாங்கி மிக சிறப்பாக நடாத்தி முடித்தார் எதிர்வரும் காலங்களில் மக்கள் நன்மை அடையக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் செயற்திட்டங்கள் இடம் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -