சம்பூர்-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட விபத்துக்களில் ஏழு பேர் காயம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இன்று (19) ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர்-கிண்ணியா-திருகோணமலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பொலிஸ் பிரிவில் பால் பண்ணைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த தந்தையும் மகளும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மூதூர் தள வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கடற்கரைச்சேனை-கட்டைப்பறிச்சான் பகுதியைச்சேர்ந்த தந்தையான எஸ்.கஜன் (27வயது) மற்றும் அவரது மகளான கே.சதுர்சிகா (09வயது) மற்றும் சம்பூர் சந்தனவெட்டை தமிழ் வித்தியாலயத்தின் அதிபரான அதே இடத்தைச்சேர்ந்த ஏ.வில்வராஷா (54வயது) எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை கிண்ணியா உப்பாறு பாலத்திற்கருகில் பஸ்ஸொன்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக கிண்ணியா மற்றும் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -