இரத்தினபுரியில் ஏ.ரி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணமோசடி செய்யும் கும்பலொன்று நடமாடுவதால் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இரத்தினபுரி, குருவிட்ட, கலவான போன்ற பகுதிகளில் சில அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரத்தில் பணம் பெறும் அட்டைகள் மூலம் மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, குருவிட்ட பிரதேச மக்கள் வங்கி கிளைகளின் இலத்திரனியல் இயந்திரங்களில் இவ்வாறு மோசடி இடம் பெற்றுள்ளதாகவும் அடுத்தவர்களின் பணம் பெறும் அட்டைகளின் உதவியால் தகவல்களை சூட்சுமமாக பெற்று இந்த மோசடி நடவடிக்கைகளில் மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வங்கி வாடிக்கையாளர்கள் வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -