பாடசாலை மாணவர்கள் 42 பேர் திடீர் சுகவீனத்தால் வைத்தியசலையில் அனுமதிப்பு





மு.இராமச்சந்திரன் -

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம இலக்கம் 1 பாடசாலை மாணவர்கள் 42 பேர் திடீர் சுகவீனம் காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே தலைசுற்று மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தரம் 1 தொடக்கம் 5 வரையினால் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவகளில் 41 பேர்சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புள்ளதுடன் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் கடந்த 19 ம் திகதி டயகம பகுதியிலுள்ள ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அண்ணதானத்தை உண்ட சிலர் கடந்த நாட்களாக இவ்வாறு நோயில் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -