எமெனில் மீண்டும் சவூதி கூட்டுப்படை விமான தாக்குதல் 3௦ பொது மக்கள்பலி-12 பேர் காயம்

எம்எம் நிலாம்டீன்- 

மனின் ஹாஜ்ஜா மாகாணத்தில் சவூதி அராபியா மற்றும் அமேரிக்கா கூட்டு படைகளின் விமான தாக்குதலால் ஆண் பெண்கள் சிறுவர்கள் உட்பட 3௦ பேர் மரணம்.12 பேர் காயம்.

கடந்த வாரம் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க கூட்டு படைகளின் விமான தாக்குதலில் 29 பொது மக்கள் பலியானார்கள் மற்றும் 17 பேர் காயமடைந்தார்கள்.

யமனின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் அங்கு உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் கடந்த 3 ஆண்டுகளாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யமனின் அரச படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் யமனின் தென்பகுதியில் உள்ள ஹவுத்தி படையின் கட்டுப்பாட்டில் உள்ள சஹர் மாவட்டத்தில் பிரபல வர்த்தக பகுதிகளில் விடுதிகள் மீது சவூதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொது மக்கள் உட்பட கட்டிடங்களும் தாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை அழிக்கும் முஸ்லிம் நாடுகள்

சிரியா நாட்டில் அப்பாவி மக்கள் மீதும் சிறுவர்கள் மீதும் அரசாங்க படைகள் கடந்து 5 ஆண்டுகளாக மிருகத்தனமான காட்டுத் தர்பார் நடத்தி அந்த மக்களை அளித்து அந்த நாட்டையே அளித்து மக்களையும் அளித்து அந்த நாட்டை குட்டிச்சுவராக்கி வருகிறது அரசு .

இன்று சிரியா நாட்டு மக்கள் ஐரோப்பா முழுவதும் .அகதிகளாக இன்றும் மெடிட்ரேனியன் கடலில் மரணித்து வருகின்றார்கள். இன்னும் அங்கு இரத்த வெறி அடங்கவில்லை.

துருக்கி.அல்ஜீரியா.உகண்டா சோமலியா பாகிஸ்தான்.ஆப்கானிஸ்தான் இப்போது யமன் இப்படியாக முஸ்லிமை முஸ்லிமே அடித்துக் கொள்ளும் கொல்லும் இழிவு நிலை .இவைகளை தட்டிக் கேட்க எந்தவொரு நாடும் இல்லை .காரணம் இவனுகள் அடித்து கொண்டு சாகட்டும் என்று ஐ நா மன்றம் உட்பட அத்தனை நாடுகளும் கை கட்டி பார்த்துக் கொண்டுள்ளது.

ஆனால் அழிவது மனித இனம் என்பதுதான் வேதனை பதவி மோகம் கொண்ட .சோனகர்களும் பதவி வெறி பிடித்த சோனக நாடுகளும் அடித்துக் கொள்ளும் போது எந்தவொரு நாடும் கண்டு கொள்வதில்லை அடித்து சாவுங்கடா என்று விட்டு விடும்.

இப்போது சவூதி அராபியா யமனை அழித்து அந்த மக்களை அளிக்காமல் ஓயாது .சவுதியின் இரத்த வெறி அடங்கும் வரை தாக்குதல் தொடரும்.

இரத்த வெறி பிடித்த பதவி ஆசை மோகம் கொண்ட சோனகர்களுக்கு இது பாவம் என்று தெரியவில்லையா ? அழிப்பது மனித இனம் என்று தெரியவில்லையா ? உள்நாட்டுப்போரில் சவூதி மூக்கை நுழைத்து அந்த மக்களை அமேரிக்கா துணையுடன் அழிப்பது எந்த நியாயம். இதற்கு ஒரு கண்டனம் வேண்டாமா? எம்மால் முடிந்த இந்த ஒரு எதிர்ப்பையாவது கட்ட வேண்டாமா ?

ஆனால் உலகில் பறந்து பரந்து வாழும் சோனகர் கூட்டம் ஒரு எதிர்ப்பை இந்த இரத்த வெறி பிடித்து அலையும் மனித வேட்டையாடும் நாடுகள் மீதும் அரசு மீதும் ஒரு கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாமா?

சவுதியிடம் கையேந்தி நிற்கும் சோனக நாடுகள் ஒரு போதும் இந்தக் கண்டனத்தை செய்யாது. சவூதி அரேபியாவிடம் பிச்சை வாங்கும் சோனக நாடுகளும் இந்த மனித வேட்டைக்கு எதிராக வாயே திறக்காது.

அதனால் சோனக மனித வேடை தொடரும்

மனிதர்கள் என்றால் மனித நேயம் இருந்தால் நாளை வெள்ளிகிழமை சோனகர் கூட்டம் சவுதிக்கு எதிராக மனித வேட்டைக்கு எதிராக சோனக ஆயுத மோதலுக்கு எதிராக உலக அமைதி வேண்டி ஒரு கண்டனப்பேரணி செய்வோமா ?

ஒரு சோனக அரசியல் வியாபாரி முன் வந்து ஒரு முன்மாதிரியைக் காட்டி உலகம் முழுவதும் பரப்புவோம் ....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -