தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் சிந்தனைக்கமைய அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 180 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா ஹங்குரான்கெத்த பிரின்சஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண விவசாய , இந்து கலாசார, மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் 9.11.2017 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மற்றும் ஹங்குரான்கெத்த கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.



