ஹஸ்பர் ஏ ஹலீம்-
சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது தேசிய உச்சி மாநாடு நேற்று(21) காலை கொழும்பு 07 ல் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காம நிறுவனத்தில் மங்கள விளக்கேற்றலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது தமிழ் பேசும்,சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் ,செயற்பாட்டாளர்கள்,கொள்கை வகுப்போர் ,கல்விமான்கள்,புத்திஜீவிகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் எனப்பலரும் பங்கேற்றனர்.
சமூக பொறுப்புணர்ச்சியுடன் கூடிய சுதந்திர ஊடக கலாசாரம் எனும் தொனியில் இவ் உச்சி மாநாடு அமைந்தது.இதன்போது கடந்த கால ஊடகவியலாளர்களின் புகைப்படக் கண்காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
பல்வேறு வகையான ஊடக தொழில்சார்,ஊடகவியலாளர்கள் நலன் பாதுகாப்புத்திட்டம் உட்பட விரிவான கலந்துரையாடல்கள் கேள்விகளுக்கான விடைகளையும் உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர்,பத்திரிகை ஆசிரியர்கள் தங்களது விளக்கபூர்வமான விடயங்களையும் முன்வைத்தனர்.
மேலும் இதன்போது சுதந்திர ஊடக இயக்கத்தின் விசேட திட்டமடங்கிய ஊடகவியல் அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.