புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 21ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று




பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் 21ஆவது பிறந்த தினமான நேற்றைய தினம்(25) அந்த மாணவிக்கு நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வினை முன்னாள் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவர் களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும், வித்தியாவின் மரணத்திற்கான அஞ்சலி நிகழ்வாகவுமே இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், வித்தியாவின் உருவப்படத்திற்கு விருந்தினர்கள், பாடசாலை மாணவிகள், ஆசிரியர்கள் வித்தியாவின் நண்பர்கள் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரும் மலர்துவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து வித்தியா நினைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நடிகை மற்றும் விரிவுரையாளர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் மற்றும் வதனி சங்கர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் 284 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டதுடன் ஒன்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -