மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டினால் நியுட்டன் தோட்டத்தில் நிர்மானிக்கப்படவிருக்கும் 20 வீடுகளைக் கொண்ட தனி வீடுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.11.2017 திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எம்.திலகராஜா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜி.நகுலேஸ்வரன், நோர்வூட் பிரதேச அமைப்பாளர் மஞ்சுளா உட்பட அதிதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்..




