இராணுவ ட்ரக் வண்டி கொத்மலை பலாகொல்ல பகுதியில் விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.


க.கிஷாந்தன்-

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று 13.11.2017 அன்று பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 11 பேர் காயங்களுக்குள்ளாகி கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 11 பேரில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கண்டி பகுதியிலிருந்து பயிற்சிக்காக தியத்தலாவ பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இடது பக்கம் உள்ள பாரிய வளைவினை திருப்பும் போது மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையில் டரக் வண்டி கீழே பாய்ந்து விழுந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -