கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் ஆஷாத் சாலி, மற்றும் பெளஷி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய சுபைர்.


எஸ்.அஷ்ரப்கான்-

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணமான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் முன்னாள் அமைச்சர் சுபையிர் நேற்று (24) கொழும்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத்சாலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்துள்ளமை கவலையான விடயமாகும். இதுதொடர்பில் குறித்த ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கமைவாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருடன் கொழும்பு சென்ற முன்னாள் அமைச்சர் சுபையிர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத்சாலியினையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -