ஷிபான் BM-
அதாவுல்லாவின் மேடைப்பேச்சை ஒருபோதும் கேட்டிராத பலரும் கூட இன்று விருப்பத்தோடு கேட்கின்றார்கள். 17 வருட காலமாக வெறும் வெற்றுக்கோசங்களுக்காக ஏமாந்து போய் காயப்பட்ட சமூகத்துக்கு கயம்பு கொண்டு பூசுவதாக அதாவுல்லாவின் ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகங்களும் அமையப்பெறுகின்றன.
ஆங்காங்கே சமூகத்தை விற்றுப்பிழைப்பு நடாத்தும் தலைவர்களை காரமாக சாடவேண்டிய தேவை அதாவுல்லாவுக்கு ஏற்படுகின்றது. காரணம் அஷ்ரப் பாசறையிலே வளர்க்கப்பட்ட ஒரு தலைவன் கண் முன்னே ஒரு சமூகம் பேரம் பேசி விற்கப்படுவதனை உண்மையாக சமூகத்தினை நேசிக்கும் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அது தான் இங்கு நடக்கிறது.
அதாவுல்லா என்கின்ற ஓர் உரிமைக் குரல் குமுறி வெடிக்கிறது. ஓர் எரி மலை தன்னுள் அடக்கி அடக்கி வைத்திருந்த தீப்பிளம்புகளை, குருட்டுத்தனமாக அரசியல் வழி நடாத்தும் தலைவர்கள் மீது கக்குகிறது. அதனை நம்மவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பாகுபாடு நிலவுகிறது. தாம் வாக்களித்த கட்சித்தலைவர்களை அதாவுல்லா வெய்யும் போது தம்மை வெய்கிறார் எனும் நிலைப்பாடுக்கு மக்கள் வருவருவதனாலேயே “அதாவுல்லா எம்மை ஏசுகிறார்” எனும் நிலைப்பாட்டிற்கு வருகிறார்கள்.
அது அவ்வாறல்ல. சமூகத்தை சிறப்பாக வழி நடாத்த தவறிய தலைவர்களின் பிழையான வழி காட்டலுக்கு ஒரு போதும் பொது மக்கள் பலியாக முடியாது. மாறாக அந்த சுடு சொற்களை எம்மை பிழையாக திசைதிருப்பி நமது வாக்குகளை சூறையாடி ஏப்பம் விட்ட தலைவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும். இதனால் எந்த மக்களும் குழப்பமடையவேண்டிய தேவையில்லை. மக்களை ஏசவேண்டிய எந்தத் தேவைப்பாடும் தலைவர் அதாவுல்லாவுக்கு இல்லை. அவர் மக்களை ஏசவும் முடியாது.
ஆகவேதான், மக்கள் சரியான நிலைப்பாடுக்கு வந்து சமூகத்தின் உன்னதமான தலைவனை விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். அவருடைய அரசியல் சார்ந்த கருத்துக்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உண்மையானதாக மாறிவருவதை நாம் காணுவது கண்கூடு. எம்முள் இருக்கின்ற அரசியல் கட்சி சார்ந்த பிடிவாதங்களைத் தளர்த்தி வெற்றியின் பாதை நோக்கி அணிதிரள்வோம் இன்ஷா அல்லாஹ்.