யு.எல்.எம். றியாஸ் -
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்துஇன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை,ஜம்மியத்துல் உலமா சபை ,மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை ,சமூக சேவை அமைப்புக்கள் பொதுமக்கள் கூடடாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடுசெய்ததிருந்தனர்,
சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலின் முன்றலில் விசேட துவாப்பிராத்தயுடன் ஹிஜ்ராசந்தியில் இருந்து ஆரம்பமான கண்டனப் பேரணி பொலிஸ் வீதியூடாக பிரதேச செயலகத்தைசென்றடைந்ததது.
ஆர்பாடடத்தில் "மியன்மார் அரசே சொந்த நாட்டுமக்களை கொல்வதை நிறுத்து " ,உலக நாடுகளேமியன்மார் படுகொலைகளை நிறுத்துங்கள், அப்பாவி மக்களை கொண்றுகுவிக்காதே,, போன்றவாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாடுடத்த்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது ரோஹிங்யா முஸ்லிகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலைக் நிறுத்தக்கோரியும், இலங்கை அரசு இத்தாக்குதலைக் நிறுத்துவதற்கு உலக நாடுகளுக்கு அழுத்தங்கங்களைக் கொடுக்கக் கோரியும் சம்மாந்துறையின் உயர சபைகளினால் பிரதேசசெயலாளாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.