திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இழக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசிட்ட தோட்ட 7 இலக்க தேயிலை மலையில் 20.09.2017 மாலை தேயிலை செடிகளுக்கு உரம் போட்டுக்கொண்டிருந்த 25 வயதுடைய எஸ் கலைக்குமார் என்பரே சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு இழக்காகியவரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலில்லா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.