ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிவழங்க அவுஸ்திரேலிய நிவாரண அமைப்பு உறுதியளித்துள்ளது.
அவுஸ்திரேலிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் நாட்டின் பிரஜைகள் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.
ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு வருகைதந்திருந்த இக்குழுவினர் வாவிக்ரையிலுள்ள மௌலானா பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு அன்பளிப்புப்பொருட்களை வழங்கியதுடன் அச்சிறுவர்களுடன் தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்ஐஎம். தஸ்லிம் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.