அவுஸ்திரேலிய நிவாரண அமைப்பு மெளலானாவின் அழைப்பில் ஏறாவூர் வருகை-படங்கள்




ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிவழங்க அவுஸ்திரேலிய நிவாரண அமைப்பு உறுதியளித்துள்ளது.

அவுஸ்திரேலிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் நாட்டின் பிரஜைகள் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.

ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு வருகைதந்திருந்த இக்குழுவினர் வாவிக்ரையிலுள்ள மௌலானா பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு அன்பளிப்புப்பொருட்களை வழங்கியதுடன் அச்சிறுவர்களுடன் தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்ஐஎம். தஸ்லிம் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -