முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கதிரை தயார்.!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு 66ஆவது மாநாட்டில் பங்­கேற்­ப­தற்கு மூன்­றா­வது அழைப்­பினை நான் விடுக்­கின்றேன். மாநாட்டில் அவ­ருக்கு உரிய கதி­ரையும் தயா­ரா­கவே உள்­ளது என பிரதி அமைச்சர் நிஷாந்த முத்­து­ஹெட்­டி­கம தெரி­வித்தார்.

மஹிந்த ராஜ­பக் ஷ தாய் வீட்­டிற்கு வரும்­போது வர­வேற்க தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்று குறிப்­பிட்ட அவர் மைத்­தி­ரி­யையும் மஹிந்­த­வையும் வேறு­வே­றாக பார்க்­க­வில்­லை­யென்றும் 66 ஆவது மாநாடே ஒன்­றி­ணை­வ­தற்­கான உரிய சந்­தர்ப்பம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். சுதந்­தி­ரக்­கட்­சியின் 66ஆவது மாநாடு தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு காலியில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் பல குழப்­பங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் கட்­சியை அங்கும் இங்கும் இழுத்­துச்­செல்­வ­தா­கவும் அண்­மைக்­கா­லங்­களில் குற்­றச்­சாட்­டுகள் எழுந்­தி­ருந்­தன. எவ்­வா­றா­யினும் கட்­சியின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் அனை­வரும் ஒன்­று­கூ­டு­வ­தற்­கான சந்­தப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

66ஆவது ஆண்டு மட்டும் அல்ல 70ஆவது ஆண்டு நிறைவு மாநாடும் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் கீழ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் நிச்­ச­ய­மாக நடை­பெறும் என்­பதை நான் உறு­தி­யுடன் கூறு­கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை வர­லாற்றில் நோக்கும் போது நெருக்­க­டி­களைச் சந்­தித்து வெற்­றி­பெற்­றுள்­ள­மையை அவ­தா­னிக்க முடியும். சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் சிறு கட்­சிகள் கூட்­ட­ணியைக் கொண்­டி­ருக்­கின்ற போதும் சிறு குழு­வொன்று சுதந்­தி­ரக்­கட்­சியை சிதைத்­துக்­கொண்டு செல்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது.

அதே­நேரம் அந்­தக்­கு­ழு­வி­ன­ருக்கு தலை­மைத்­து­வத்­தினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வழங்­கு­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி மஹி ந்த ராஜ­ப­க்ஷவே நீங்கள் தற்­போதும் ஜனா­தி­பதி தான். உங்­க­ளுக்கு ஏற்­க­னவே இரண்டு அழைப்­புக்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. நான் மூன்­றா­வது தட­வை­யா­கவும் அழைப்பு விடு­கின்றேன். நீங்கள் கட்­டா­ய­மாக 66ஆவது மாநாட்­டுக்கு வருகை தர­வேண்டும்.

மாநாட்டில் உங்­க­ளுக்கு பொருத்­த­மான கதி­ரையை நாம் தயா­ராக வைத்­துள்ளோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன எங்­கி­ருக்­கின்­றாரோ அங்கே தான் உங்­க­ளுக்கும் ஆசனம் வைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் உங்­க­ளையும் நாங்கள் இரு­வ­ராகப் பார்க்­க­வில்லை. ஒரு­வ­ரா­கவே பார்க்­கின்றோம்.

அதே­நேரம் உங்­களை நாங்கள் இவ்­வ­ளவு தூரம் ஏன் அழைக்­கின்றோம் என்று சற்று சிந்­தித்துப் பாருங்கள். நீங்கள் தவா­றான ஓர் இடத்தில் இருக்­கின்­றீர்கள். நீங்கள் தாய்­வீட்­டுக்கு வருகை தரும்­போது உரிய மரி­யா­தை­க­ளுடன் வர­வேற்க தயா­ர­கவே உள்ளோம்.

நீங்கள் வரு­வது எமது கட்­சிக்கு பெரும்­ப­ல­மாகும். அடுத்த தேர்­தலில் சுதந்­தி­ரக்­கட்சி வெற்றி பெறுவதற்கு நீங்கள் எம்முடன் இருக்க வேண்டும். நீங்களும்(மஹிந்தவும்) மைத்திரியும் இரண்டு பக்கம் இருந்து விளையாட்டு வீட்டை அமைக்காது எங்களையும் நெருக்கடிக்குள்ளாக்காது சக்தி மிக்க அத்திவாரத்தினை சுதந்திரக்கட்சிக்கு இடுவதற்காக ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுகின்றேன் என்றார். (வீரகேசரி)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -