மலரும் கிழக்கு எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது,
இந்த கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது,
இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
உற்பத்திப் பொருட்களை மாகாண மட்டம் ,தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் சந்தை வாய்ப்பினை வழங்குவது இந்த கண்காட்சியின் நோக்காகும் என அவர் கூறினார்
இதனூடாக கிழக்கு மாகாணத்தின் பிரதான உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தைப் பெறுமதியொன்றை ஏற்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகின்றது.