சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள்.




காரைதீவு நிருபர் சகா-

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர்களின் பாவனைக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியன வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குடாரப்பு மற்றும் தாளையடி ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

இந்த வைபவங்கள் வடமராட்சி கிழக்கு கோட்டகல்விப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

குடாரப்பில் நடைபெற்ற வைபவத்திற்கு வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் குடாரப்பு பகுதியில் உள்ள வறிய மாணவர்கள் 13பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாளையடியில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க தலைவரும் மருதங்கேணி வைத்தியசாலை நலன்புரி சங்க செயலாளருமான சி.பொன்னம்பலம், முன்னாள் பிரதேச செயலாளர் கலாநிதி புத்திசிகாமணி, வைத்திய கலாநிதி உமாபதி, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் 18பேருக்கான வாழ்வாதார உதவிகளும், யுத்தத்தினால் காலை இழந்த செல்வரஞ்சனா என்ற பெண்ணுக்கு மோட்டார் சைக்கிளும், வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபா வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயலாளர் சி.பொன்னம்பலத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் முன்னேற்றம் ஒன்றே எமது அமைப்பின் குறிக்கோள் என தெரிவித்தார். கடந்த 10ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கி வரும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் எமது பிரதேசம் எமது மக்கள் என்ற இலக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகிறது, நாம் வழங்கும் உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வைபவங்களுக்கான ஏற்பாடுகளை வெற்றிலைக்கேணி பாடசாலை அதிபர் த.செல்வகுமார், மாமுனை பாடசாலை அதிபர் சந்திரமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -