மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல்வேறு தொழில் துறைகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. 01.09.2017 காலை முதல் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிளும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது
தேயிலை மலைகளில் தொழில் புரியும் தொழிலாளரர்களும் அட்டன் தலவாக்கலை நுவரெலியா நகரங்களிலும் வர்த்தக நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேலும் நகரங்களின் பிரதான வீதிகளிலும் குருக்கு பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்மையினால் பாதசாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வாகண சாரதிகள் அவதானதுடன் வாகணங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.