அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (31) இணைத்தலைவர்களான பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 10மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும், அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாலை 3மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -