எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (31) இணைத்தலைவர்களான பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை 10மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும், அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாலை 3மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
