நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார நிலைய ஊழியர்கள் 13.09.2017 நன்பகல் முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்
லக்கஷபான மின்சாரசபைக்குற்பட்ட கெனீயன். மவுசாகலை.விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் வரையில் மேற்படி பனிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
நுகர்வோர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சேவை சங்கத்தினரால் நன்பகல் முதல் 48 மணிநேர பணிபகிஸ்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் இதே வேலை அட்டன் மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இப் போராட்டத்தில் மின்சார சபை பொரியியலளர்கள். அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் என பலரும் கலந்துகொண்டனர்




