றிசாட்டினால் எமக்கு தலையிடி - வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் (video)

மாவில்ல பேணல் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள 1 லட்சம் காணிகளை முஸ்லீம் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க ரிசாட் பதியூதீன் தடையாக உள்ளார். அவர் நேர்மையானவர் எனின் பதவியை துறந்து மக்களுக்காக களத்தில் இறங்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் 102வது அமர்வு நேற்று(17) கைதடியில் அமைந்துள்ள பேரவையில் இடம்பெற்ற வேளை இவ்வாறு வலியுறுத்தினார்.

அதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எமது கருத்தினைப் பதிவிடுகின்றேன். வடமாகாண சபையும் வடமாகாண காணி அமைச்சும் காணி சார்ந்த விடயத்தில் சீரான அவதானம் கொண்டிருக்கவில்லை. முஸ்லீம் மக்களின் காணி விடயம் தொடர்பில் பாராமுகமாக இருக்கின்றார்கள்.

கடந்த மூன்றரை வருட காலத்தில் வடக்கு முஸ்லீம்களின் காணி தொடர்பான விடயங்கள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளன. மாவில்ல பேணல் காடுகளாக முசலி மற்றும் மடு பிரதேசத்தில் 1 லட்சம் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மிகப்பாரிய பிரச்சினையில் வடக்குமாகாண சபை கரிசனை கொள்ளவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. மக்களுடைய கருத்துக்களையோ அல்லது மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையோ பெறவில்லை. உடனடியாக காணி அமைச்சும், வடமாகாண சபையும் தலையிட்டு அந்த அறிக்கை வருவதற்கு முன்னர் கவனம் செலுத்த வேண்டும். அல்லது அந்த அறிக்கையில் உள்ளவற்றினை அறிந்துகொண்டு அந்த அறிக்கையினை வெளியிட வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலையீடுகள் காணப்படுகின்றன. வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக உள்ள அமைச்சர் ரிசாட்பதியுதீன் தான் மாத்திரம் அந்த காணி விடயத்தில் தலையிட வேண்டுமென்ற போக்குடன் செயற்படுவதனால், வடமாகாண சபை அந்த விடயத்தில் தலையிடமுடியாத நிலை காணப்படுகின்றது.

மாகாண சபையின் தலையீடுகளுக்கு வரும் போது அவற்றினை அவர் திசை திருப்பியுள்ளார். ஏனைய அரசியல் கட்சிகளின் தலையீடுகள் வரும் போதும், அவர் அவற்றிலும் தலையிட்டுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு வரும் போதும் மக்களை ஒன்று திரட்டி ரவூப் ஹக்கீம் அந்த விடயத்தில் தலையிடக்கூடாது என்ற வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்,அந்தப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலையிட்டு அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒருவர் அந்த விடயத்தினை கையாள முடியாது. அவ்வாறு அவர் நேர்மையாக கையாளுவாராக இருந்தால், தமது அமைச்சுப் பதவியை தூக்கி எறிந்து விட்டு, களத்தில் இறங்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் காணிப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இருப்பதற்கு ரிசாட் பதியூதீன் அமைச்சரும் ஒரு காரணம். முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம்களுக்கான காணிப்பிரச்சினையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போதியளவு கரிசனை கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -