முஸ்லிம் சமூகம் தங்களது தலைவலி நிவாரணத்துக்கு கொண்டுவந்த மருந்தால் முண்டமாகும் நிலைக்குதள்ளப்பட்டிருப்பதை உள்ளூராட்சி எல்லை பிரிப்பு விவகாரத்தில் இருந்தும் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளதாகபானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுகான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மையில் இராஜாங்க அமைச்சர் பௌசி தலைமையில் கூடிய முஸ்லிம் குழுவானது உள்ளூராட்சி எல்லை பிரிப்புவிவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்கலந்துரையாடும் முடிவை எடுத்துள்ளது.
எங்களது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி எல்லை பிரிப்பானது எங்களுடைய நலனை கருத்தில் கொண்டுபிரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியே குறித்த எல்லை பிரிப்பை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள்.எங்கள்ஆட்சிகாலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது விடயத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாங்கள் கூறினால் இவ் ஆட்சிக்கெதிராக வீண் பழிசுமத்துகிறோம் என கூறலாம்.இப்போது சு.க முஸ்லிம் அமைச்சர்களே இது முஸ்லிம்களுக்கு பாதகமானதெனகூறுகின்றனர்.இவ் அரசின் உண்மை முகத்தை அறிய இதனை விட என்ன சான்று வேண்டும். முஸ்லிம்களை வைத்துஇன்னும் உள்ளூராட்சி மன்றங்களின் காலங்களை இழத்தடிப்புச் செய்ய இவ்வரசு ஏதேனும் திட்டங்களை தீட்டுகிறதாஎன்ற சந்தேகமும் எழுகிறது.
எமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் பள்ளிகள் மீது கல் வீசும் சம்பவங்கள் போன்றவைகள் தான் இடம்பெற்றன.இவ்ஆட்சியில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக பாதிக்கவல்ல விடயங்களை இவ்வரசு செய்துவருகிறது.முஸ்லிம்கள்தலையிடிற்கு மருந்து தேடிச் சென்று முண்டமாக நிற்கின்றனர்.