மஹிந்­த குடும்பத்தினர் அச்சத்தில் - அஸாத் சாலி

நீதி அமைச்சர் பத­வியை பொறுப்­பேற்க முன்­னரே மஹிந்­த­வுடன் இருக்கும் சிலர் ஜனா­தி­ப­தியை சந்­திக்க வரி­சையில் இருந்து வரு­கின்­றனர். அத்­துடன் விஜே­தாஸ ராஜபக்ஷ நீதிமன்ற நட­வ­டிக்­கை­களில் தலை­யி­ட­வில்­லையா என்­பதை விசா­ரணை மேற்­கொண்டால் தெரி­ய­வரும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத் தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

விஜே­தாஸ ராஜபக் ஷ நீதி மன்ற மற் றும் சட்­டமா அதிபர் திணைக்­கள நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டா­த­தனால் அவர் அமைச்­சுப்­ப­த­வியில் இருந்து நீக்­கப்­பட்­டுள்ளார் என்றும் புதிய நீதி அமைச்சர் தலதா அத்­து­க்கோ­ரள இந்த விட­யங்கள் தொடர்­பாக ஒப்­பந்தம் செய்­து­கொண்­டு­தான் நீதி அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­றுக்­கொண்­டுள்­ளாரா என உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். விஜே­தாஸ ராஜபக் ஷ நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் தலை­யிட் டாரா என்­பதை நீதி­மன்­றத்தில் பொருத்­தப்­பட்­டுள்ள கமரா மூலம் அறிந்­து­கொள்­ளலாம்.

மேலும் விஜே­தா­ஸவின் வில­க­லுடன் ராஜபக்ஷ குடும்­பத்­தினர் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். அத­னால்தான் தலதா அத்­து­கோ­ர­ளவின் நட­வ­டிக்­கை­களை மிகவும் அவ­தா­ன­மாக கண்­கா­ணிப்­ப­தாக மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அத்­துடன் புதிய நீதி அமைச்சர் இன்னும் தனது பத­வியை பொறுப்­பேற்­க­வில்லை. ஆனால் தல­ தாவின் நிய­ம­னத்­துடன் மஹிந்­த­வுடன் இருக்கும் சில மோசடிக் காரர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­னாலும் ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன்­னாலும் வரி­சையில் இருக்­கின்­றனர்.

அத்­துடன் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மற்றும் செய்­தி­யாளர் மாநாட்டை குழப்­பி­ய­மைக்­கெ­தி­ராக ஞான­சார தேர­ருக்கு நீதி மன்­றத்தில் உட­ன­டி­யாக பிணை­வ­ழங்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது விஜே­தாஸ ராஜபக் ஷ நீக்­கப்­பட்­டதும் ஞான­சார தேரர் நாட்டில் இல்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.அதற்கு உபகாரமாகவே மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐக்கிய தேசிய கட்சி பாதுகாத்து வருகின்றது என்றார். நன்றி வீரகேசரி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -