மக்களே அவதானம் : வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்சரிக்கை

திர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இலங்­கையில் உச்ச வெப்­ப­நி­லை இருக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது. இதனால் வடக்கில் மேலும் வெப்­ப­நிலை அதி­க­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கைக்கு செங்­குத்­தாக சூரியன் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் பய­ணிக்­க­வுள்­ளது. இதனால் நேர­டி­யான வெப்­ப­நிலை இலங்­கைக்கு இருக்கும். அத­ன­டிப்­ப­டையில் நேற்றுமுன்தினம் நாவ­லடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்­களில் நண்­பகல் 12.12 மணிக்கு சூரியனின் உச்ச வெப்­ப­நிலை காணப்­பட்­டது. 

இதே­வேளை நாட்டின் தென்­மேற்குப் பிர­தே­சங்­களில் தற்­போது நிலவும் மழை­யுடன் கூடிய கால­நிலை சற்று அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது. மேல், சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும் சில வேளை­களில் மழை பெய்யும். இரத்­தி­ன­புரி, கேகாலை, களுத்­துறை, காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களில் சுமார் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. வடமேல் மாகா­ணத்­திலும் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் பல இடங்­களில் மழை பெய்­யலாம். 

இடை­யி­டையே நாட்டை ஊட­றுத்து குறிப்­பாக வடக்கு, வட­மத்­திய, வடமேல், கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும், மாத்­தறை, அம்­பாந்­தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றராக அமைந்திருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -