க.கிஷாந்தன்-
ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் 05.08.2017 இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் நிதி அமைச்சரும் தற்போது வெளிவிவகார அமைச்சருமான ரவிகருணா நாயக்க அவர்களுக்கு எதிராக நிதி மோசடி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். இந்த அரசாங்கம் ஊழல்களை ஒழிப்பதற்காகவே அரசாங்கத்தை மாற்றியுள்ளார்கள். தற்போது அமைச்சர் அவர்கள் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வேறு எவறாவது நிதி மோசடியில் ஈடுபட்டால் கைது செய்து செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தள்ளமை சுட்டிக்காட்ட தக்கது. எனவே கெபினட் அமைச்சு பதவி வகிக்கின்ற அமைச்சர் ரவி கருணாநாயக்கயின் இவ்வாறான செயற்பாடு வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே அமைச்சர் ரவிகருணாநாயக்கவை அமைச்சு பதவிலிருந்து நீக்கி உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாட்டின் ஜனாதிபதியையும் பிரதமரையும் இவ்விடயம் தொடர்பாக கூடிய அக்கறைகாட்ட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.